தேர்தல்-தடுத்த மனைவியை சுட்டு கொன்ற கணவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விடாமல் தன்னை தடுத்த மனைவியை சுட்டுக் கொன்றார் கணவர்.நாமக்கல் மாவட்டம் செட்டித் தோட்டம் கிராமத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. திருச்செங்கோடுஅருகே உள்ள இக் கிராமத்தில் கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிட விரும்பினார் கிருஷ்ணமூர்த்தி (39). இதைஅவரது மனைவி தங்கமணி (25) கடுமையாக எதிர்த்தார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்தகிருஷ்ணமூர்த்தி தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டார். இதில் தங்கமணி அந்தஇடத்திலேயே பலியானார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications