For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பெல்ஜிய தூதரக பெண் ஊழியர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் உள்ள பெல்ஜிய நாட்டு தூதரகத்தின் பெண் ஊழியர் அவரது கார்டிரைவரால் படுகொலை செய்யப்பட்டார்.

பெல்ஜிய தூதரின் உதவியாளரான இசபெல்லா (35) வசந்த விஹார் பகுதியில் தனதுமகனுடன் வசித்து வந்தார்.

இவரது வீட்டில் டிரைவராக பணியாற்றியவர் விஜய் பால் செளத்ரி. காரை மிகவேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டி வந்ததால் செளத்ரியை சமீபத்தில் வேலையைவிட்டு நீக்கினார் இசபெல்லா.

இந் நிலையில் இசபெல்லா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் 22கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் செளத்ரியை கைது செய்தனர்.இசபெல்லாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.

வேலையை வீட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை செய்ததாகடிரைவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X