For Daily Alerts
Just In
டெல்லியில் பெல்ஜிய தூதரக பெண் ஊழியர் கொலை
டெல்லி:
டெல்லியில் உள்ள பெல்ஜிய நாட்டு தூதரகத்தின் பெண் ஊழியர் அவரது கார்டிரைவரால் படுகொலை செய்யப்பட்டார்.
பெல்ஜிய தூதரின் உதவியாளரான இசபெல்லா (35) வசந்த விஹார் பகுதியில் தனதுமகனுடன் வசித்து வந்தார்.இவரது வீட்டில் டிரைவராக பணியாற்றியவர் விஜய் பால் செளத்ரி. காரை மிகவேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டி வந்ததால் செளத்ரியை சமீபத்தில் வேலையைவிட்டு நீக்கினார் இசபெல்லா.
இந் நிலையில் இசபெல்லா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் 22கத்திக் குத்து காயங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் செளத்ரியை கைது செய்தனர்.இசபெல்லாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.
வேலையை வீட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை செய்ததாகடிரைவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, September 25, 2006, 5:30 [IST]