கருணாநிதியின் கச்சத்தீவு நாடகம்: ஜெ
சென்னை:
கச்சத் தீவு பிரச்சனை குறித்து பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருப்பது வரப்போகும் உள்ளாட்சி தேர்தலைமனதில் வைத்து தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,கச்சத் தீவு அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்றுபிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி இருக்கிறார். இச்செயல் தமிழக மீனவர்களின நலனில் அக்கறைஉள்ளவர் போல் தன்னைக் காடடிக் கொள்கிற பொய்மை கலந்த செயலாகும்.
கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை 1974ல் அப்போததைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த போதுஅப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எதிர்க்கவில்லை. அப்போது தமிழர்களின் வாழ்வைப் பற்றி சிறிதும்கவலைப்படாத கருணாநிதி கச்சத்தீவு பிரச்சனை குறித்து இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதுவரப்போகும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுகின்ற ஒரு நாடகம் ஆகும்.
தமிழக மீனவர்களுக்கும், கச்சத் தீவுக்கும் தொப்புள் கொடி உறவு. அங்கு சென்றால் தான் மீன்பிடிக்க முடியும்.காரணம் அந்தப் பகுதியில் தான் மீன் அதிகமாக கிடைக்கிறது. அந்த பகுதிக்கு மீனவர்கள் சென்றாலே இலங்கைகடற்படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிடித்த மீன்களையும் அவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். கொடுமையான தாக்குதலுக்குமீனவர்கள் ஆளாகின்றனர். தொடர்ந்து இலங்கை சிறைகளிலும் அடைக்கப்படுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொருமுறையும் நாம் குரல் கொடுத்து, அவர்களை மீட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று இன்று கடிதம் எழுதுவதன் மூலம்,கருணாநிதி மீனவர்களின் பக்கம் இருப்பதாக அர்த்தமாகிவிடாது. அவ்வாறு அவர் மீனவர்களின் பக்கம்இருப்பது உண்மையானல், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நடைமுறைகளைமேற்கொள்ளாமல் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டத் தொடங்கியது ஏன்?
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.