சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இகையடுத்து அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இன்று காலை அவசரமாகத் தரையிறங்கியது.சென்னை அருகே பறந்து கொண்டிருந்தபோது முகம்மத் பின் திலோன் என்ற பயணி நெஞ்சு வலியால் துடித்தபடிமயக்கமானார். இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதிபெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 5.55 மணிக்கு விமானம் தரையிறங்கியது. இதையடுத்து திலோன் ஆம்புலன்ஸ் மூலம்தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் விமானம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications