சென்னைக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே துணை நகரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கூத்தம்பாக்கம் என்ற இடத்தில் சென்னைக்கு புதிய துணை நகரத்தை உருவாக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதலில் சென்னை வண்டலூர் அருகே துணை நகரம் எற்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்கு தோழமை கட்சியானபாமக மற்றும் எதிர்கட்சியான அதிமுக ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பகுதியில் துணைநகரம் ஏற்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட்டு விட்டது.இந் நிலையில் துணை நகரத்தை வேறு எங்கு ஏற்படுத்துவது என்று அதிகாரிகளுடன் அரசு ஆய்வு நடத்தி வந்தது.இந் நிலையில் கூத்தம்பாக்கம், நசரத்பேட்டை ஆகிய 2 ஊர்களையும் இணைத்து புதிய துணை நகரத்தைபிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், மற்றும் சிறுசேரி பகுதிகளுக்கு இந்த துணை நகரம் அருகாமையில் அமையும். இப்பகுதியில்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக 5,000 ஏக்கர் நிலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நகருக்கான மாதிரி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகமான சிஎம்டிஏடியும் இணைந்து துணைநகரத்தை உருவாக்கவுள்ளன.












Click it and Unblock the Notifications