உள்ளாட்சி: 2.25 லட்சம் பேர் வேட்பு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவிகளுக்குப் போட்டியிட 2.25 லட்சம் பேர்வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 13,15ம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கடந்த 20ம் தேதி இதற்கானவேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாக தினந்தோறும்ஆயிரக்கணக்கானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வந்ததனர்.
இந் நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இன்று மாலை வரை வேட்பு மனு தாக்கல்செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.
மாநகராட்சி மேயர், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு இந்தத்தேர்தல் நடக்கிறது.
கடைசி நாளான இன்று தான் மிக அதிக அளவில் மனுக்கள் தாக்கலாயின. மொத்தம் சுமார் 2.25 லட்சம் பேர்வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications