For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தூண்டுதலால் கொலை மிரட்டல்-சண்முகம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

என்னை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி பெரும் பிளவை சந்திக்கும். இதனால் தான்என்னை நீக்க பயப்படுகிறார் ஜெயலலிதா என சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகதரப்புக்கு தாவிய மதுரை எம்எல்ஏ சண்முகம கூறியுள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

என்னை ஜெயலலிதா நன்றி இல்லாதவன் என்று கூறுகிறார். திராவிட இயக்கங்கள்ஒன்றுபட வேண்டும் என்று நான் சொன்னது எப்படி நன்றி மறந்த செயலாகும்?

ஜெயலலிதாவிடம் மென்மையான போக்கை கடைப் பிடியுங்கள் என்று அமைச்சர்ஸ்டாலினிடம் நான் கூறியது கட்சி விரோதமான செயலா?

முதல்வர் கருணாநிதி அழகு தமிழில் பேசுபவர் என்று அவரை ஒரு பத்திரிகையில்ஜெயலலிதா பாராட்டவில்லையா?

ஆனால், நான் எனது தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்த உதவியஸ்டாலினை பாராட்டியது மட்டும் நன்றி கெட்ட செயலா?

ஜெயலலிதா நன்றி உள்ளவரா என்பதை கருப்பசாமி பாண்டியன், சாத்தூர்ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன் போன்றவர்களைக் கேட்டால் தெரியும்.நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தவாவது ஜெயலலிதாவுக்கு தகுதியிருக்கிறதா?

என்னை ஜெ பேரவையில் இருந்து நீக்கிவிட்டு இது "டிரைலர்தான் என ஜெயலலிதாகூறியுள்ளார். "டிரைலர் என்றால் கதைச் சுருக்கம். அப்படியானால் என் கதையைமுடித்துவிட நினைக்கிறாரா?

அவர், "டிரைலர் என்று கூறிய பின்னர் தான் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.எனவே, அதிமுக தலைமையின் தூண்டுதல்படி என்னை கொல்ல முயற்சி நடக்கிறது.

இதனால் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் புகார் தர இருக்கிறேன்.மேலும் முதலமைச்சர், சபாநாயகரிடமும் புகார் செய்வேன்.

நான் திமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

எனக்கு அதிமுகவில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. எனவே, திமுகவுக்குபோகமாட்டேன். அதிமுகவில் இருந்து விரைவில் பல எம்எல்ஏக்கள் விலகப்போகின்றனர்.

அதிமுகவில் உழைத்தவனுக்கு மரியாதை இல்லை. தமிழே தெரியாத பதர் சயீத்துக்குஎன் தோழி என்று சொல்லி பதவி தந்துள்ளார் ஜெயலலிதா.

தினகரன், தங்கத்தமிழ்ச் செல்வன், பன்னீர்செல்வம், ஜெயலலிதா என தேனிமாவட்டத்திற்குள்ளேயே கட்சி முடங்கிவிட்டது. கட்சியின் செயற்குழுவுக்குக் கூடஎம்எல் ஏக்களை கூப்பிடாத ஒரே கட்சி அதிமுக தான்.

இப்படித்தான் கட்சி நடத்துவார்களா? உள்ளாட்சித் தேர்தலில் எனது தொகுதியில் 20வார்டுகளில் தேர்தல் நடக்கிறது. அதில் நாகரிகமான அரசியல்வாதிகளைதேர்ந்தெடுக்க பிரசாரம் செய்வேன்.

அதிமுக தூய்மை பெறும்வரை போராடுவேன். என்னை கட்சியை விட்டு நீக்கினால்கட்சி பெரும் பிளவை சந்திக்கும். இதனால் தான் என்னை நீக்க பயப்படுகிறார்ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிக்காமல் விட மாட்டேன் என்றார் சண்முகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X