அதிமுகவுடன் சிக்கல் இல்லை: திருமா
சென்னை:
அதிமுகவுடன் உடன்பாட்டில் சிக்கல் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாளவன்கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 4% இடங்களை பெற்று உடன்பாடு செய்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிந்துள்ளது.
கடலூர், விழப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தையில் சிறு குழப்பம் ஏற்பட்டது.இதனை சில தொலைகாட்சிகளில் அதிமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல்ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தையில் போது சிக்கல் ஏற்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் அவற்றை சரி செய்ய முயற்சிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயேவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன் என அவர்கூறினார்.
8 மாவட்டங்களில் பிரச்சனை:
முன்னதாக இடப் பங்கீடு தொடர்பாக அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் 8 மாவட்டங்களில் தனித்துபேட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.
கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 4% இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கட்சியின்நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கவில்லை.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கேட்கும் இடங்களை அதிமுகவினர் தர மறுத்ததால்கூட்டணயில் இருந்து விலக்கும்படி பல மாவட்ட செயலாளர்கள் திருமாவளவனை வலியுறுத்தியதாகக்கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications