அதிமுக வேட்பாளர்கள் 7 பேர் மாற்றம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், திருச்சி மற்றும் சென்னையில் 7வேட்பாளர்களை அதிமுக தமைை திடீரென மாற்றியுள்ளது.
அடுத்த மாதம் 13, 15ம் தேதிகளில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 3 நாட்களாக வெளியிட்டு வருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுகடைசி நாள் என்பதால், பெயர் பட்டியலில் இருந்து வேட்பாளர்கள் மனு செய்ய தீவிரமாகிவந்தனர்.இந் நிலையில், திருச்சி மாநகராட்சியில் 6 வேட்பாளர்களையும் சென்னை மாநகராட்சியில் ஒரு வேட்பாளரையும்அதிரடியாக மாற்றம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய வேட்பாளர்களின் பெயர்கள்:
சென்னை மாநகராட்சியின் 70 வது வார்டுக்கு கோ.செழியன், தொடர்பான செய்திகள் இந்த வார்டுக்கு அர்ஜூனன்அறிவிக்கப்பட்டு இருந்தார். திருச்சி மாநகராட்சியில் 2வது வார்டுக்கு ரவிசங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இந்த வார்டில் கனகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
5வது வார்டுக்கு முத்துலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் தமிழரசி வேட்பாளராகஅறிவிக்கப்பட்டிருந்தார். 7வது வார்டுக்கு காவேரி ராஜாராம் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில்லியாகத் அலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
21வது வார்டுக்கு வரகநேரி ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் ஜெகந்நாதன்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். 41வது வார்டுக்கு ஜெயராணி அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள்இந்த வார்டில் அஞ்சலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
42வது வார்டுக்கு ஜி.பால அமுதா அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் பி.ராஜத்தி பேகம்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications