முரசு இல்லாட்டி தீபம்: கேப்டன் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் தரப்படாததால் வேட்பாளர்கள்தீபம் சின்னத்தில் போட்டியிடுமாறு கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலின் சின்னப் பட்டியலிலேயே முரசு சின்னம் இல்லை. இதுதொடர்பாக டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழு தேர்தல்ஆணையர்களை சந்தித்துப் பேசியும் பலன் இல்லை.இந் நிலையில் தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.மாவட்ட ஊராட்சிகளுக்கா கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியங்களுக்கான கவுன்சிலர்,மாநகராட்சிகளுக்கான கவுன்சிலர், நகராட்சிகளுக்கான கவுன்சிலர்,பேரூராட்சிகளுக்கான கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, போட்டியிடும் தேமுதிகவினர்தீபம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில்தீபம் சின்னத்தை குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விஜய்காந்தின் கொடியில் தீபம் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications