போட்டி வேட்பாளர்களுக்கு திமுக எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரப்பூர்வம் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்துள்ள திமுகவினர் போட்டியிலிருந்து வாபஸ் பெற வேண்டும்.இல்லாவிட்டால் கடும் நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அக்டோபர் 13 மற்றும் 15 ஆகியதேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் அதிகாரப்பூர்வவேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும்திமுகவினர் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தலைமைக் கழகத்திற்குபுகார்கள் வந்துள்ளன.
அதுபோல வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் நாளைக்குள் தங்களது மனுக்களைவாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படும்கடுமையான நடவடிக்கைக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என அன்பழகன்எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications