வாக்குப் பதிவு-பாதுகாப்புக்கு 81000 போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளில் அண்டை மாநில போலீசார்உள்பட 81,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 13 மற்றும் 15ம் தேதிகளில் இரண்டு கட்டமாகஉள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.மொத்தம் 1,30,962 லட்சம் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக சுமார் 4.79லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.
இதற்காக மாநிலம் முழுவதும் 80,458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தேர்தலை அமைதியாக நடத்தும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு தேர்தல்ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சுமார் 81,000 போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் இருந்தும் போலீஸார்வரவழைக்கப்படவுள்னர்.












Click it and Unblock the Notifications