ஜெயமாலா, பணிக்கர் கைதாக வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் சிலையை தொட்டதாக வீணான சர்ச்சையை ஏற்படுத்திய கன்னட நடிகை ஜெயமாலாவும்,உன்னி கிருஷ்ண பணிக்கரையும் கைது செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண் புகுந்துள்ளதாக உன்னி கிருஷ்ண பணிக்கர் கூறி சர்ச்சையைஏற்பட்டுத்தினர். இதை தொடர்ந்து மறுநாளே நான் தான் அந்தப் பெண் என்று பேக்ஸ் அனுப்பி மேலும்சர்ச்சையை கிளப்பிபனார் ஜெயமாலா.இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், உன்னியும் ஜெயமலாவும் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இது குறித்து கேரள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சதி திட்டம் தீட்டியதாக ஜெயமாலாவையும்பணிக்கரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இருவர் மீது 295 (ஏ), 120 (பி) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மத உணர்வுகளை காயப்படுத்தும் சதி திட்டம்தீட்டியதாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications