கருணாநிதி, வைகோ பிரசாரம் ஆரம்பம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துமுதல்வர் கருணாநிதி தனது பிரசாரத்தை அக்டோபர் 5ம் தேதி நெல்லையில்தொடங்குகிறார்.
அக்டோபர் 5ம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதிபேசுகிறார். 6 ம் தேதி மதுரையிலும், 7ம் தேதி திருச்சியிலும், 8ம் தேதிசென்னையிலும் 10ம் தேதி கோவையிலும் கருணாநிதி பேசுகிறார்.11ம் தேதி மாலை 3 மணிக்கு சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதிபேசுவார் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ சென்னையில் பிரசாரம்:
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம்செய்கிறார்.
சென்னை மாநகராட்சியின் 155 கவுன்சிலர் பதவிக்கும் அதிமுக, மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
மதிமுக 27 வார்டுகளில் நிற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணிக்குப் போய் விட்டதால் அந்த இடங்களிலும் அதிமுகவேபோட்டியிடுகிறது.
அதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நாளை சென்னையில் பிரசாரம் செய்கிறார். நாளை மாலை 5 மணிக்கு அயனாவரம் பகுதியில்பிரசாரத்தைத் தொடங்கும் வைகோ, சைதாப்பேட்டையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.