கீரிப்பட்டி: தலைவர் போட்டியின்றி தேர்வு
மதுரை:
சர்ச்சைக்குரிய மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பால்சாமி என்பவர்போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல்ஆகிய பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பல காலமாக காலியாகவே உள்ளன.இந்தப் பஞ்சாயத்துக்களில் முக்குலத்தோர் வகுப்பினர் அதிகம் இருந்தாலும் கூட தலைவர் பதவி தலித்சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டதால் தங்களுக்கு தலித் ஒருவர் தலைவராக விரும்பாத முக்குலத்தோர்வகுப்பினர் இப்பஞ்சாயத்துக்களுக்கு தலைவர் வருவதை அனுமதிக்க மறுக்கின்றனர்.
இங்கு தேர்தல் நடந்து தலைவராக யாராவது வந்தாலும் கூட வெற்றி பெற்ற அடுத்த நாளே பதவியை ராஜினாமாசெய்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப்பஞ்சாயத்துக்களில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பாப்பாபட்டியில் 4 பேரும், நாட்டாமங்கலத்தில் 7 பேரும் போட்டியில் உள்ளனர். கீரிப்பட்டியில் 3 பேர்வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 2 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யுப்பட்டன. பால்சாமிஎன்பவரது மனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து பால்சாமி இங்கு போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இவரது தேர்வு வாக்கு எண்ணிக்கை நாளன்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஊர் மக்களால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் பால்சாமி என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications