இலங்கை-2 மாதத்தில் 200 தமிழர்கள் கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 200 அப்பாவி தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான போரில் ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துவருகின்றனர். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூறியிருப்பதாவது,

யாழ்பாணத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 50 பேரும், செப்டம்பர் மாதத்தில் 37 பேரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.விமானப்படை வீரர்களால் செப்டம்பரில் மட்டும் 15 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறிய பொது மக்கள் மீது ராணுவம் குண்டு வீசியதில்40 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். தென் மராட்சியில் 11 பொது மக்கள் இலங்கை ராணுவத்தினரால்கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+