மோனிகா பேடிக்கு 5 ஆண்டு சிறை!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

போலி பாஸ்போர்ட் வழக்கில் தாதா அபு சலீமின் காதலியான இந்தி நடிகை மோனிகா பேடிக்கு ஹைதராபாத்சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தாதா அபு சலீம், அவரது காதலி மோனிகா பேடியும், குண்டுவெடிப்புக்குப் பின் போலி பாஸ்போர்ட் மூலம் போர்ச்சுகல் நாட்டுக்குத் தப்பி ஓடினர். அங்கு அவர்களைபோர்ச்சுக்கல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Abu Salem

இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ கடுமையாக முயற்சித்து வந்தது. இந்த முயற்சியின்விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

Monicabedi

மோனிகா பேடி மீது ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்து தொடர்பாகவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேடிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனைமற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சத்தார், முகம்மது யூனஸ்ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பையொட்டி ஹைதராபாத் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தீர்ப்பை கேட்பதற்காகமோனிகா பேடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார்கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+