மோனிகா பேடிக்கு 5 ஆண்டு சிறை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
போலி பாஸ்போர்ட் வழக்கில் தாதா அபு சலீமின் காதலியான இந்தி நடிகை மோனிகா பேடிக்கு ஹைதராபாத்சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தாதா அபு சலீம், அவரது காதலி மோனிகா பேடியும், குண்டுவெடிப்புக்குப் பின் போலி பாஸ்போர்ட் மூலம் போர்ச்சுகல் நாட்டுக்குத் தப்பி ஓடினர். அங்கு அவர்களைபோர்ச்சுக்கல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![]() |
இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ கடுமையாக முயற்சித்து வந்தது. இந்த முயற்சியின்விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
![]() |
மோனிகா பேடி மீது ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்து தொடர்பாகவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேடிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனைமற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சத்தார், முகம்மது யூனஸ்ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பையொட்டி ஹைதராபாத் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தீர்ப்பை கேட்பதற்காகமோனிகா பேடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார்கொண்டு சென்றனர்.














Click it and Unblock the Notifications