பிரபாகரனுக்கு ஸ்ரீ ரவிசங்கர் சால்வை!
டெல்லி:
ஆன்மீக தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு வெள்ளை சால்வையை பரிசாகஅளித்துள்ளார் என்று ரவிசங்கரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்ட் ஆல் லிவிங் அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர். ஆன்மீகதலைவரான ரவிசங்கர், இலங்கை இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், இலங்கைஅரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக அவ்வப்போது கூறி வருகிறார்.இந்த நிலையில் ரவிசங்கர் திடீர் பயணமாக இலங்கை சென்றார். தலைநகர் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குஹெலிகாப்டர் மூலம் சென்ற ரவிசங்கர் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைசந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், ரவிசங்கர்கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கு பிரபாகரனுக்கு வெள்ளை சால்வையை அவர் பரிசாக அளித்தார். தான் மிகவும்விரும்பும், மதிக்கும் வெகு சிலருக்கு மட்டுமே இவ்வாறு வெள்ளை சால்வையை பரிசாக அளிப்பது ரவிசங்கரின்வழக்கம்.
சால்வையை அவர் நேரடியாக பிரபாகரனிடம் கொடுத்தாரா அல்லது வேறு யாராவது பிரதிநிதி மூலம்பிரபாகரனுக்கு அவர் சால்வையைக் கொடுத்தாரா என்பது குறித்து விரிவாக கூற முடியாது. காரணம் இது மிகமுக்கியமான விஷயம். உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்றார் அந்த செய்தித் தொடர்பாளர்.
ரவிசங்கர் பிரபாகரனை சந்தித்துப் பேசினாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரபாகரன் அறிவித்துள்ள நிலையில் ரவிசங்கரின் கிளிநொச்சி பயணம்முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி பயணத்திற்குப் பின்னர் ரவிசங்கர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆன்மீகதலைவர்களால் மட்டுமே மன மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்மட்டுமே நான் கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டேன்.
நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதும் எனது பயணத்தின் இன்னொரு நோக்கம். இப்பிரச்சினையில்இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்கையும் நான் அங்கு நான் விவாதித்தேன் என்றார் ரவிசங்கர்.
நார்வே தூதர் வருகை:
இதற்கிடையே அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்கானபூர்வாங்க ஏற்பாடுகளை செய்வதற்காக நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹேன்சன்பேயர் ஞாயிற்றுக்கிழமைகொழும்பு வருகிறார்.
இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரபாகரன் அறிவிப்பு வெளியிட்டதைத்தொடர்ந்து நார்வே தூதர் கொழும்பு வருகிறார். கொழும்பு வரும் அவர் முதலில் அரசுப் பிரதிநிதிகளைசந்திக்கிறார். அதன் பின்னர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
பேச்சுவார்ததையை எப்போது வைத்துக் கொள்வது, எங்கு பேசுவது, எப்போது பேசுவது என்பது உள்ளிட்டவைகுறித்து இரு தரப்புடனும் நார்வே தூதர் ஹேன்சன்பேயர் விவாதிக்கவுள்ளார்.
இதேபோல நார்வே அமைச்சரும், முன்னாள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நார்வே தூதருமான எரீக்சோல்ஹீமும் இலங்கை வருகிறார். அவர் பிரபாகரனை சந்தித்துப் பேச வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications