பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டோங்கான்:
பசிபிக் கடலுக்கு அடியில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது.நியூசிலாந்துக்கு வட-கிழக்கே உள்ள குட்டித் தீவான சமோ தீவு அருகே இந்த மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சுனாமி அலை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இத்தீவுக்கு உட்பட்ட டோங்கான் என்ற நகருக்கு அருகே கடலுக்கடியில் பயங்கரநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7 ரிக்டராக பதிவாகியுள்ளது.நில நடுக்கத்தைத் தொடர்ந்து சமோவா தீவை பெரிய அளவிலான கடல் அலைகள்தாக்கின.
இதனால் இந்தக் கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
![]() |
இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், தீவின்தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்து விட்டது.
தொடர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந் நிலையில் சுனாமி ஆபத்துநீங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இப் பகுதியில் கடலில்படகுகள், கப்பல்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications