மதுரை: உள்ளாட்சி பிரசாரத்துக்கு கட்டுப்பாடு
சென்னை:
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 9ம் தேதிமாலை 5 மணி முதல் 11ம் தேதி மாலை 5 மணி வரை பிரசாரம்செய்ய முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ்குப்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில், அக்டோபர் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான பிரசாரம் 9ம் தேதி மாலை 5மணியுடன் ஓய்கிறது. ஆனால் இங்கே ஒரு சிக்கல் எழுந்துள்ளது.மதுரை மாநகராட்சிக்கு அக்டோபர் 15ம் தேதி தான் தேர்தல்நடைபெறவுள்ளது. எனவே மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்9ம் தேதி மாலைக்குப் பிறகு 11ம் தேதி மாலை வரை உள்ளாட்சித்தேர்தலுக்கான பிரசாரத்தை செய்ய முடியுமா என்ற குழப்பம்அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவியது.
இதற்கு தற்போது மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில், மதுரை மத்திய தொகுதியில், 9ம் தேதி மாலை 5மணியுடன் பிரசாரம் முடிகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி,தேர்தல் பிரசாரம் முடிந்த ஒரு இடத்தில், அங்கு வாக்குப் பதிவுநடந்து முடியும் வரை எந்தவிதமான பிரசாரத்தையும் மேற்கொள்ளமுடியாது.
இது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கும் பொருந்தும். எனவேமதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 9ம் தேதி மாலைமுதல் 11ம் தேதி மாலை வரை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைமேற்கொள்ள முடியாது.இதை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனநரேஷ்குப்தா எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications