ஐ.நா. தேர்தல்: பணத்தை கொட்டும் கொரியா
லண்டன்:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தங்களது நாட்டு வேட்பாளர் பாங் கி மூனுக்கு ஆதரவாகவாக்களிப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு தென் கொரியா கோடிக்கணக்கான பணத்தை வாரி வழங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பாங் கி மூன், இந்தியாவின் சசி தரூர்உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர். யார் வெற்றி பெறுவார்கள் என்று நடத்தப்பட்ட மாதிரி தேர்தல்களில்பாங் கி மூன் தான் முன்னணியில் உள்ளார். சசி தரூருக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.இந்த நிலையில், பாங் கி மூனின் வெற்றிக்காக தென் கொரியா குறுக்கு வழியில் இறங்கியிருப்பதாககூறப்படுகிறது. பாங் கி மூனுக்கு ஆதரவு சேகரிப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளை தென் கொரியா பணத்தால்அடித்து வருகிறது.
இதுகுறித்து புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மூனுக்கு ஆதரவாக தென் கொரியா தீவிரபிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு முழுமையாக நம்பியிருப்பது பணத்தைத்தான்.
ஆப்பிரிக்க நாடுகள் அத்தனைக்கும் கோடிக்கணக்கான பணத்தை தருவதாக தென் கொரிய அரசு உறுதிஅளித்துள்ளதாம். வழக்கமாக கொடுக்கப்படுவதை விட இது மிகவும் அதிகமாம். இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மூனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று ஆப்பிரிக்க நாடுகளிடம் கூறி வருகிறதாம் தென் கொரியா.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள (நிரந்தர நாடுகளைத் தவிர்த்த மற்ற நாடுகள்)நாடுகளையும் இதுபோல குறுக்கு வழியில் தன் பக்கம் ஈர்க்கவும் தென் கொரியா முயன்று வருவதாக அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்:
தாய்லாந்து துணை பிரதமர் சுரகியார்த் சதிரதாய், ஐ.நா.வுக்கான ஜோர்டான் தூதர் இளவரசர் ஜெய்த் ராத் ஜீத் அல்உசேன், ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜெயந்த தனபாலா, முன்னாள் ஆப்கானிஸ்தான் நிதிஅமைச்சர் அஷ்ரப் கனி, லாத்வியா அதிபர் வைக் ப்ரீபெர்கா ஆகியோர்.












Click it and Unblock the Notifications