2 சென்ட் நிலம் ஃப்ரீ: கலக்கும் பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே உள்ள புரசப்பட்டி கிராமப் பஞ்சாயத்து தேர்தல்பிரசாரத்தில், திமுக ஸ்டைலில், பல இலவச வாக்குறுதிகளைவழங்கி இரு வேட்பாளர்கள் செய்து வரும் பிரசாரம் அந்தபஞ்சாயத்து வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மதுரை அழகர்கோவில் அருகே உள்ளது புரசப்பட்டி பஞ்சாயத்து.இந்த பஞ்சாயத்தின் கீழ் தேக்காம்பட்டி, கீழ்ப்பட்டணம்,செட்டிக்குளம், நவக்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இங்கு தற்போது தலைவராக உள்ள ஈஸ்வரியே மீண்டும்போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அம்மாசி என்பவர்போட்டியிடுகிறார். இவர் முன்பு தலைவராக இருந்தவர்.

இருவரும் சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைசேகரித்து வருகின்றனர். ஈஸ்வரியின் வாக்குறுதிகள்தான் மக்களைஅதிகம் கவர்ந்துள்ளன. என்னை ஓட்டுப் போட்டு தலைவர்பதவிக்கு தேர்வு செய்தால், ஏழைக் குடும்பத்துக்கு 2 சென்ட் நிலம்இலவசமாக தருவேன் என்று அதிரடியாக பிரசாரம் செய்துவருகிறார் ஈஸ்வரி.

இது எப்படி சாத்தியம் என்று ஈஸ்வரியிடம் கேட்டால்,செட்டிக்குளம் மற்றும் நவக்குளம் ஆகிய கிராமங்களில் அரசுக்குச்சொந்தமான ஒன்பதரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதைஅரசுடன் பேசி, ஏழைகளுக்கு இரண்டு சென்ட் நிலமாகப் பிரிக்கநடவடிக்கை எடுப்பேன் என்று விளக்குகிறார் ஈஸ்வரி.

ஈஸ்வரியின் இந்த திமுக ஸ்டைல் இலவச வாக்குறுதி, கிராமமக்களை நன்றாகவே கவர் செய்துள்ளதை உணர முடிகிறது.இவர் இப்படி என்றால் எதிர்த்துப் போட்டியிடும் அம்மாசிஅதிரடியாக பிரசாரம் செய்கிறார். எனக்கு வாக்களித்தால்,புரசப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ளகோவில்களை ரூ. 20,000 செலவில் புதுப்பித்து, சீரமைத்துதருவேன் என்கிறார் அம்மாசி.

இருவரும் செய்து வரும் பிரசாரத்தைப் பார்க்க கூட்டம் கூடுகிறதோஇல்லையோ, அவர்கள் அள்ளி விடும் வாக்குறுதிகளை கேட்டுரசிக்க பெரும் கூட்டம் கூடத்தான் செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+