ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்பக்தர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ரங்கநாதர் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப்பணியின் போது ஏற்பட்ட அதிர்வுகளால் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால்பக்தர்கள் கலக்க மடைந்தனர்.உடனடியாக பாதாள சாக்கடைப் பணி நிறுத்தப்பட்டது. கோபுரம் இடிந்து விடாமல் தடுப்பதற்காகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவிலிலிருந்து வெளியாகும் கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேற கிழக்கு வாசல் மட்டும்தான் ஒரேவெளியேற்றப் பாதையாக உள்ளது. எனவே தான் இந்த வழியாக கழிவு நீர் வடிகாலை பாதாள சாக்கடையுடன்சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் இந்தப் பணியால் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சாக்கடை அமைக்கும் பணியை தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications