டெல்லி: வேகமாய் பரவும் டெங்கு-11 பேர் பலி
டெல்லி:
தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெரும் பீதிஏற்பட்டுள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.
படு வேகமாக இந்த காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்களிடையே பெரும் அச்சம்பரவியுள்ளது.டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக டாக்டர்உள்பட 11 பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலுக்குபாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படு வேகமாக இருப்பதால் நோய்பரவலும் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொசுக்களைஒழிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தடுப்புப் பணிகளில்2,400க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி காங்கிரஸ் அரசு இன்று அதிகாரிகள்கூட்டத்தைக் கூட்டியுள்ளது.