தேமுதிக வேட்பாளர்களுக்கு தீபம் சின்னம்!
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களுக்கு தீபம் சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள்ஒதுக்கப்படும் பணி முடிவடைந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின்வேட்பாளர்களுக்கு அந்தந்தக் கட்சிகளுக்குரிய சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின்வேட்பாளர்களுக்கு அவர்கள் கோரும் சின்னம் முன்னுரிமை அடிப்படையில்வழங்கப்படும். ஒரே சின்னத்தை 2 பேர் கேட்டால் குலுக்கல் முறையில் சின்னம்ஒதுக்கப்படும்.
அந்த வகையில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர்கள் தீபம் சின்னத்தைக்கோரியிருந்தனர். அக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களுக்கு தீபம் சின்னம்கிடைத்துள்ளது. சிலருக்கு மட்டும் வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது.
சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கும் பணிதொடங்கியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர்கள் முரசு சின்னத்தில்போட்டியிட்டனர். இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் தீபம் சின்னத்தில்போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவில் முன்னாள் அதிமுக அமைச்சர்:
இதற்கிடையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒய்.எஸ்.எம்.யூசப், தேமுதிகவில்இணைந்துள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் யூசுப். பின்னர்ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராகஇருந்தவர்.
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை தர்மபுரி ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த யூசுப்,தேமுதிகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை விஜயகாந்த் வரவேற்றார்.