For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்து பிரதமரான முன்னாள் ராணுவ தளபதி

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

தாய்லாந்து நாட்டின் பிரதமராக முன்னாள் ராணுவத் தளபதி சுராயுத் சுலனான்ட்பொறுப்பேற்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் நடந்த ரத்தம் சிந்தா புரட்சியால் பிரதமர் தக்ஷின் சினவத்ராஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் இருந்தபல அமைச்சர்கள் ஊழல் புகார்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றகச் சென்ற சினவத்ராவும், அவரது மனைவிமற்றும் குடும்பத்தினர் புரட்சி காரணமாக தாய்லாந்துக்கு திரும்பவே இல்லை.

இந் நிலையில் அரசரின் அனுமதியோடு ஆட்சியை கவிழ்த்த ராணுவ தளபதி சோந்திபூன்யாரத்லின் புதிய இடைக்கால அரசை நியமித்துள்ளார். பிரதமராக முன்னாள்ராணுவத் தளபதி சுராயுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தாய்லாந்தின் 18வது பிரதமர் ஆவார்.

சுராயுத் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பங்கு வர்த்தகம் சீரடைந்துள்ளது.பல்வேறு தரப்பினரும் சுராயுத்தின் நியமனத்தை வரவேற்றுள்ளனர். பொருளாதாரவளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படப் போவதாக சுராயுத்தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரைஎனது அரசு நாட்டை திறம்பட வழி நடத்தும். எனது ஆட்சியின் கீழ்பொருளாதாரத்தில், தாய்லாந்து சுய சார்புடைய நாடாக மாறும். மன்னர் பூமிபால்அதுல்யதேஜ் காட்டும் வழிப்படி நாட்டை வழி நடத்துவேன்.

மக்கள் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வேண்டும். அதுதான் இப்போதுமுக்கியம் என்றார் சுராயுத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X