உள்ளாட்சி: 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் வருகிற 13ம் தேதியும், 15ம் தேதியும் நடைபெறவுள்ளது. வேட்பாளர் இறுதிப் பட்டியல்வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.இந்த தேர்தலில் நான்கு வகையான வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்படுகின்றன. மாநகராட்சிகள்மற்றும் நகராட்சிகளுக்கு வெள்ளை நிறத்திலான வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பேரூராட்சிகள் உள்ளிட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ளை, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்புஆகிய நிறங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
லத்திகா ஆய்வு: இதற்கிடையே, சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளைமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் இன்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுநடத்தினார்.
அதிக பதட்டமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு 2 மடங்கு கூடுதல் பாதுகாப்புஅளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications