அக்-30ல் மீண்டும் இலங்கை அமைதி பேச்சு?
கொழும்பு:
![]() |
| தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகள் தரப்புடன் பேச்சு நடத்திய நார்வே குழு |
விடுதலைப் புலிகளுடன் அக்டோபர் 30 அல்லது நவம்பர் 10ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தஇலங்கை அரசு முன் வந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நின்று போயுள்ளஅமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நார்வே அமைதிக் குழு முயற்சிசெய்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு புலிகள் தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில்நார்வே அமைதித் தூதர் ஜான் ஹேன்சன் பேயர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கை அரசின் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாகஅறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஸ்ரீபாலா கூறுகையில், நார்வே தூதர் கிளிநொச்சிக்குச் சென்றுவிடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள்தயார் என்று நார்வே தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளோம் என்றார் ஸ்ரீபாலா.
இதையடுத்து இலங்கை அரசின் சமாதான செயலக தலைவர் டாக்டர் பலிதகொஹோனோவையும் நார்வே தூதர் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர்நிருபர்களிடம் பலித கூறுகையில்,அக்டோபர் 30 அல்லது நவம்பர் 10ம் தேதி பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது என்றுஇன்னும் இறுதி செய்யவில்லை என்றார்.
இதையடுத்து கிளிநொச்சி சென்ற நார்வே குழு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினர்.













Click it and Unblock the Notifications