103 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக களம் இறங்கிய அதிமுக நிர்வாகிகள் 103 பேரை கட்சியிலிருந்துநீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வவேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் காரணத்தினாலும்,
கழக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் பணியாற்றும் காரணத்தினாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்துக்குகளங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும்,
சென்னை, கடலூர் கிழக்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, கோவை மாநகர் மாவட்டங்களை சேர்ந்த 103நிர்வாகிகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications