அந்தமானில் பேய் மழை: விமானங்கள் திரும்பின
சென்னை:
அந்தமானில் பலத்த மழை பெய்வதால் 2வது நாளாக இன்றும் சென்னையிலிருந்துஅந்தமான் சென்ற விமானங்கள் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டன.
அந்தமானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்தமானுக்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.நேற்று அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு சென்ற தனியார் விமானம் அங்குபலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பி வந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து போர்ட் பிளேர் சென்ற இரண்டுவிமானங்கள் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டன.
காலை 6.50 மணிக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பின்னர் சென்றஅலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்ததால்300க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தமானில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால் எப்போது விமானப்போக்குவரத்து சீரடையும் என்பதை அதிகாரிகளால் உறுதியாக தெரிவிக்கமுடியவில்லை.












Click it and Unblock the Notifications