இத்தாலிய அமைச்சரை கவர்ந்த சத்தியாகிரகம்
ரோம்:
மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தால் கவரப்பட்ட இத்தாலி நாட்டுஅமைச்சர் எம்மா பொன்னினோ, மேற்காசியாவில் அமைதி நிலவ வலியுறுத்திசத்தியா கிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
காந்தியடிகளின் சத்தியா கிரகப் போராட்டம் உலகுக்கு அறிமுகமாகி 100ஆண்டுகளைத் தொட்டு விட்டது. இன்றளவும் அது மிகப் பொருத்தமான ஒருஅமைதிப் போராட்டமாக திகழ்கிறது.இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த சத்தியாகிரகம் இப்போது உலகநாடுகளையும் கவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி நாட்டின் ஐரோப்பியவிவகாரத்துறை அமைச்சர் எம்மா பொன்னினோவை காந்தியடிகளின் சத்தியா கிரகம்வெகுவாக ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் இத்தாலி எம்.பிக்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்அடங்கிய கூட்டத்தில் பேசுகையில், மகாத்மா காந்தி கண்டுபிடித்த சத்தியாகிரகபோராட்ட முறை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.
எனது கட்சிக்கும் இந்த போராட்ட முறை பிடித்துப் போய் விட்டது. அமைதியானமுறையில் நமது எதிர்ப்பை காட்டுவது என்பது முற்றிலும் வித்தியாசமானதாகஇருக்கிறது. எதிர்ப்பு என்றாலே வன்முறை என்று உள்ள இந்தக் காலத்தில், சத்தியாகிரகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
மேற்காசியாவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியா கிரகப்போராட்டத்தை நடத்த நான் முடிவு செய்துள்ளேன். காந்தி போதித்த அகிம்சைஉள்ளிட்ட பல்வேறு உரிய கொள்கைகளை நான் தினசரி வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். அது நல்ல பலன் தந்துள்ளது என்று கூறியுள்ளார் எம்மா.
எம்மாவின் கூற்றை அவர் சார்ந்த ரேடிகலி கட்சியும் பிரதிபலிக்கிறது. காந்தியின்போராட்ட முறைகளால் கவரப்பட்ட அக்கட்சி, தனது கொடியில் காந்தியின்உருவத்தையும் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications