திமுகவினருடன் மோதல்-காளிமுத்து மைத்துனர் சாவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மைத்துனர் நந்தகோபால், மதுரை மாநகராட்சி 29வது வார்டில்திமுகவினருடன் ஏற்பட்ட மோதலின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

மதுரை தெற்குவாசல் பகுதியில் நேற்று திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே பெரும் மோதல்வெடித்தது. இதில் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் சேதப்படுத்தப்பட்டது.

திமுகவின் தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது. திமுக, அதிமுகவைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கழகத்தினர் மீது ஆங்காங்கே வன்முறைத் தாக்குதல்கள்அதிகரித்து வருகின்றன.

சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட திமுக, ஜனநாயகத்தை நம்பாமல்பணநாயகத்தை நம்பியும், காவல்துறையைப் பயன்படுத்தியும் வன்முறையை அரங்கேற்றி வருகிறது.

மதுரை மாநிகராட்சி 29வது வார்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதை அறிந்த அதிமுகஅவைத் தலைவர் காளிமுத்துவின் மைத்துனரும், 29வது வார்டு கழக வேட்பாளருமான நந்தகோபால் அதைத்தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாக்குவாதம் மற்றும் தள்ளுள்ளு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைகேள்விப்பட்ட நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

நந்தகோபாலை இழந்து வாடும் காளிமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இந் நிலையில் நேற்றைய மோதல் தொடர்பாக திமுக, அதிமுக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+