நாஞ்சில் சம்பத்துக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் மதிமுக பிரமுகர் விஜயா தாயன்பனை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீதுவிஜயா தாயன்பன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத்தை நள்ளிரவில் போலீஸார்அதிரடியாக கைது செய்தனர்.இதையடுத்து நாஞ்சில் சம்பத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ரூ. 5000 சொந்த ஜாமீனில் சம்பத்தை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் 1மாதத்திற்கு சைதாப்பேட்டை 23வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராக வேண்டும் எனவும்நீதிபதி நிபந்தனை விதித்தார்.












Click it and Unblock the Notifications