அரியர்ஸ்-மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
தஞ்சை:
அரியர்ஸ் கவலையால் மருத்துவக் கல்லூரி மாணவி விடுதி வளாகத்தில் உள்ள ஜிம்மில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிகாடு கிராமத்தைச் சேர்ந்த சோபியா (22) தஞ்சை மருத்துவக் கல்லூரியில்எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தினமும் அதிகாலை அருகே உள்ள ஜிம்முக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் அதிகாலை 4 மணியளவில் சோபியா ஜிம்மில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவிகள் ஜிம்முக்கு சென்ற போது அங்கு சோபியா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வார்டனுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சோபியாவின் பெற்றோருக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சோபியாபிணமாக தொங்கிய இடத்தில் ஒரு நோட்டு புத்தகம் கிடந்தது. அதில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் பாடம் படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் எனஎழுதப்பட்டுள்ளது. சோபியா பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்டகவலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என சக மாணவிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications