சொன்னதைச் செய்வார் கருணாநிதி: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்றுமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை ப.சிதம்பரம் நேற்று சென்னையில் தொடங்கினார். எழும்பூர், கொளத்தூர் ஆகியஇடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அப்போது, மாநில அரசுடன் இணக்கமாக செயல்படக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளை வரும் தேர்தலில் மக்கள்தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தின் போது கலைஞர் கூறியதை நிறைவேற்றுகிறாரா, இல்லையா.?

சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டை தரப்படும் என்றார். அதை நிறைவேற்றியுள்ளார். விவசாயிகளின்கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்றார். அதே போல செய்தார்.

கலர் டிவி தருவோம் என்றார். தொடங்கியிருக்கிறார், தொடர்ந்து நிறைவேற்றுவார். நிலமில்லா ஏழைகளுக்குநிலம் தருவோம் என்றார். தொடங்கியிருக்கிறார், நிச்சயம் நிறைவேற்றுவார்.

எனவே சொன்னதைச் செய்யும் கலைஞரின் அரசுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுககூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+