சத்தியாகிரக விழா: தெ.ஆ. அதிபர் வருத்தம்!

Subscribe to Oneindia Tamil

டர்பன்:

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த சத்தியாகிரக நூற்றாண்டு விழாவுக்கு அதிக அளவிலான மக்கள் கலந்துகொள்ளாததன் மூலம், தென்னாப்பிரிக்க மக்களுக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டதாக அந்நாட்டுஅதிபர் மெபகி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில்தான் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினார். அதுதொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பிரமாண்ட விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 150 பேர் மட்டுமே இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க அதிபர் மெபகி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க மக்களுக்குபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இணைய தளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்தெரிவித்துள்ளதாவது: அக்டோபர் 1ம் தேதி சகாரா கிங்க்ஸ்மெட் விளையாட்டரங்கில் நடந்த சத்தியாகிரகநூற்றாண்டு விழாவிற்கு, நமது சகோதர நாடான இந்தியாவின் பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த விழாவின்போது விளையாட்டரங்கமே காலியாக இருந்தது போல காணப்பட்டது. திரளான மக்கள் இந்தவிழாவுக்கு வராமல் போனது குறித்து நான் அதிர்ச்சி அடைந்தேன். வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நமது மக்கள்ஏற்பட்ட இந்த கரும்புள்ளி மறையாமல் பெரும் களங்கமாக இருக்கும்.

1906ம் ஆண்டு காந்தியடிகள், பிக்ஸ்லே, ஜான் லங்காலிபலேலே போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டசத்தியாகிரக இயக்கம் 100 வருட பழமை வாய்ந்தது என்று கூறியுள்ளார் மெபகி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+