தாய் பாம்பாட்டியின் பச்சக் சாதனை!

Subscribe to Oneindia Tamil

பட்டயா:

தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதியகின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி.

தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது.இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம்கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம்இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்டோர் அங்குஇருந்தனர்.

ஒவ்வொரு பாம்பாக பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடப்பட்டது. அந்த பாம்பினை தாஜா செய்து அதன்வாயில் முத்தமிட்டார் சய்புத்தி. அவர் ஒவ்வொரு பாம்புக்கும் முத்தமிடும்போது பார்வையாளர்கள் கரகோஷம்செய்து பாராட்டினர். இப்படியாக 19 பாம்புகளுக்கும் முத்தமிட்டு சாதனை படைத்தார் சய்புத்தி.

கடும் விஷம் கொண்ட ராஜ நாகங்களை படு அனாயசமாக சய்புத்தி முத்தமிட்டது பார்வையாளர்களை ஜில்லிடவைத்தது. 19வது நாகத்தை அவர் முத்தமிட்டு முடித்தபோது அரங்கமே கைத்தட்டல் ஒலியால் அதிர்ந்தது.

இந்த சாதனை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 1999ம் ஆண்டு 11 கொடிய விஷம் கொண்டபாம்புகளுக்கு முத்தமிட்டு படைத்திருந்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+