மீண்டும் கேப்டன் ஆனார் யூனிஸ் கான்
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாககேப்டனாக அறிவிக்கப்பட்ட முகம்மது யூசப், துணை கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 4 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக் கோப்பைப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு யூனிஸ் கானை முதலில் கேப்டனாக நியமித்தது பாக். கிரிக்கெட்வாரியம்.ஆனால் டம்மி கேப்டனாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே கேப்டனாக இருக்க முடியாது என்றுஅறிவித்த யூனிஸ் கான், வாரியக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேப்டனாக முகம்மது யூசப் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், யூனிஸ் கான் விவகாரம்தொடர்பாக வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக நஸீம்அஷ்ரப் நியமிக்கப்பட்டார்.
அஷ்ரப் பதவிக்கு வந்ததுமே திடீர் திருப்பமாக யூசுப் மாற்றப்பட்டு மீண்டும் யூனிஸ்கானே கேப்டனாகஅறிவிக்கப்பட்டார். யூசுப் துணை கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குக் கிளம்புவதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது. கேப்டன் பதவியைஏற்றுக் கொள்வதாக யூனிஸ்கான் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல முகம்மது யூசுப்பும் துணை கேப்டனாகசெயல்பட ஒப்புதல் அளித்துள்ளார் என்று அஷ்ரப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications