திமுக ஆட்சியில் ஏறிப் போச்சு விலைவாசி: ஜெ.
திருநெல்வேலி:
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
நெல்லையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாபேசுகையில், கடந்த ஆட்சியில் மத்திய அரசு 6 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. ஆனால் எனதுதலைமையிலான அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. விலைவாசியை ஏற்றவில்லை.தற்போது சர்வதேச சந்தையில், கச்சா எண்ணையின் விலை குறைந்து வருகிறது. இப்போது ஏன் பெட்ரோல், டீசல்விலையை குறைக்கவில்லை? ஏன் குறைக்க முடியாதா?
எனது ஆட்சியில் விலை வாசி உயர்வை சீராக வைத்திருந்தோம். ஆனால் இப்போது திமுக ஆட்சியில்விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எனது ஆட்சியில் ஒரு கிலோ மஞ்சள் ரூ. 28க்கு விற்றது, திமுகஆட்சியில் ரூ. 50க்கு விற்கிறது.
அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ புளி 25க்கு விற்றது, இப்போது ரூ. 50. ஒரு கிலோ பூண்டு ரூ. 50க்கு விற்றது,இப்போது ரூ. 75. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 28. இப்போது, ரூ. 52. ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.25.இப்போது ரூ. 65.
கடலைப்பருப்பு ரூ. 18, இப்போது ரூ. 45. பாசிப் பருப்பு ரூ. 26, இப்போது ரூ. 55. மைதா கிலோ ரூ.12.இப்போது ரூ. 28. கோதுமை கிலோ ரூ. 12, இப்போது ரூ. 20.
இதுமட்டுமா, கட்டுமானப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இப்படியே போனால்கட்டுமானப் பணியே ஸ்தம்பித்துப் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 3 யூனிட் மணல் ரூ. 1,500 முதல் ரூ. 3,000 வரை விற்றது. இப்போது ரூ. 3,000 முதல்ரூ.6,000 ஆக உயர்ந்து விட்டது. திமுக ஆட்சிக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
எனது ஆட்சியில் பல கோப்புகளை நான் கையெழுத்திடாமல் போய் விட்டதாக கூறுகிறார் கருணாநிதி.என்னிடம், நீங்கள் சிறந்த முதல்வர், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என பாராட்டியவர் பிரதமர்மன்மோகன் சிங்.
அப்படிப்பட்ட என்னைப் பார்த்து கோப்புகளில் நான் கையெழுத்திடவில்லை என்கிறார் கருணாநிதி. கடந்த ஐந்துஆண்டுகளில் கிட்டத்தட்ட 60,000 கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டுள்ளேன்.
2001ல் நான் முதல்வராக பதவியேற்றபோது, கருணாநிதி 5,000 கோப்புகளில் கையெழுத்திடாமல் போய்விட்டார். நாகரீகம் கருதி அதை நான் வெளியே சொல்லவில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications