ஒரே நாளில் 500 முன் ஜாமீன் மனுக்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று ஒரே நாளில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி 500அதிமுகவினர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது.உள்ளாட்சித் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்முழுவதும் ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்களை குறி வைத்து போலீஸார் கைது செய்வதாக அதிமுகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிமுகவைச் சேர்ந்த 500 பேர்முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை, திவாகர், ஜெயக்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் இன்று பிற்பகல்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications