உள்ளாட்சித் தேர்தல் ஒரு பரீட்சை: கருணாநிதி
சேலம்:
உள்ளாட்சித் தேர்தல் ஒரு பரீட்சை. இதில், ஐந்து மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்குமக்கள் அளிக்கப் போகும் பதிலை அறிய காத்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேலத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் முதல்வர்கருணாநிதி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இங்கே ஓட்டு கேட்பதற்காக நான் வரவில்லை. என்ன பதில் சொல்கிறீர்கள்என்று கேட்கவே வந்திருக்கிறேன். கடந்த ஐந்து மாதங்களில் நாங்கள் செய்த காரியங்கள் சரியானவையா?தேவையானவையா? போதுமானவையா? தந்திருக்க வேண்டியவைதானா? என்று கேட்க வந்திருக்கிறேன்.
நாங்கள் நினைத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலை 6 மாதம் கழித்துக் கூட வைத்திருக்க முடியும். அதற்குப்பொருத்தமான ஒரு காரணத்தையும் சொல்லியிருக்க முடியும். ஆனால் எனக்கே ஒரு அவசரம். நமது ஆட்சிகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே இந்த உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில்நடத்திட முடிவு செய்தோம்.












Click it and Unblock the Notifications