தமிழகம்: கொசுக்களை ஒழிக்க 3200 ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க கூடுதலாக 3,200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம்டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின்சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் சுப்புராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிக்காக ஏற்கனவே 650பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 3,200 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சிக்குன்குனியா பாதிப்புஉள்ளது. மலைப் பகுதி என்பதால் நீலகிரி மாவட்டத்திலும், தண்ணீரைத் தேக்கி வைக்காத பகுதியாக இருப்பதால்திருவண்ணாமலையிலும் கொசு உற்பத்தி இல்லை.

நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு விசைத் தறிகள், சாயப் பட்டறைகள் போன்றவைகாரணமாக அதிக தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், கொசு உற்பத்தி அதிகம் உள்ளது. இதனால் சிக்குன்குனியாபாதிப்பும் அதிகம் உள்ளது.

தமிழகத்தில் 62,500 பேர் சிக்குன்குன்யாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் எண்ணிக்கை இப்போது 25சதவீதமாக குறைந்துள்ளது.

சிக்குன்குனியா மற்றும் டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 2 கோடி நிதியுதவிஅளித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ரூ. 15 கோடியை செலவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்சுப்புராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+