செலவுக்குக் கூட காசு தராத அதிமுக: திருமா.
வடலூர்:
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள்கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதையாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தார்களா என்பது தெரியாது. ஆனால்எங்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்காக இந்த முடிவை எடுத்தோம்? சுய நலத்தின் அடிப்படையில் இதை எடுக்கவில்லை. தொலைநோக்கோடுஇந்த முடிவை நாங்கள் எடுத்தோம்.
எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க முடியும். ஏனென்றால் நிமிர முடியும் என்பதால் பொறுத்துக்கொண்டோம். ஆனால் எல்லை கடந்தபோதுதான் நாங்கள் பொங்கி எழுந்தோம்.
அதிமுக எங்களது உழைப்பை மட்டுமே எதிர்பார்த்தது. எங்களை அங்கீகரிக்க நினைக்கவில்லை. வெற்றிவாய்ப்பு இல்லாத தொகுதிகளைத்தான் சட்டசபைத் தேர்தலில் கொடுத்தனர்.
எங்களுக்கு பெட்டி பெட்டியாக கொடுத்ததாக பலர் குற்றம் சாட்டினர். ஆனால் பிரசார செலவுக்குக் கூட அவர்கள்பணம் தரவில்லை என்பதுதான் உண்மை.
சரி உள்ளாட்சித் தேர்தலிலாவது செல்வாக்கு உள்ள இடமாக கொடுங்கள் என்றோம். அதையும் தரவில்லை.அலட்சியப் படுத்தினார்கள். அரவணைத்துச் செல்லத் தவறினர்.
சந்திக்க முடியாத, மதிக்கத் தெரியாத தலைவியிடமிருந்து விலகி மரியாதை உள்ள அணியில் சேர்ந்திருக்கிறோம்.இப்போது இனம் இனத்தோடு இணைந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலேயே இணைந்திருந்தால் 100 சதவீதவெற்றி கிடைத்திருக்கும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications