உள்ளாட்சி: நாளை 2வது கட்ட வாக்குப் பதிவு
சென்னை:
மதுரை, திருச்சி மாநகராட்சி உள்பட மொத்தம் 63,000 உள்ளாட்சிப் பதவிகளுக்கு நாளை 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ணிதல் கட்டத் தேர்தலில் சென்னையில் பெருமளவு வன்ணிறைச் சம்பவங்கள் நடந்ததால், நாளைய தேர்தலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது. நேற்று ணிதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 28,000 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, 67,000 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது.இதில் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் வரலாறு காணாத வன்ணிறை நடந்தது. வெறும் 45 சதவீத வாக்குகளே பதிவாகின. இதிலும் பாதியளவுக்கு கள்ள ஓட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 63,000 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. மதுரை, திருச்சி மாநகராட்சிகள், 57 நகராட்சிகள், 27 மூன்றாம் நிலை நகராட்சிகள், 280 பேரூராட்சிகள், 6,061 ஊராட்சிகள், 190 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதற்காக 38,252 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,162 சாவடிகள் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 210 வாக்குச் சாவடிகள் சென்னை புறநகர்களில் உள்ளன.
ணிதல் கட்டத் தேர்தல் பெரும் வன்ணிறையை சந்தித்து விட்டதால் 2 வது கட்டத் தேர்தலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தேர்தலில் போலீஸாரின் பணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதால் 2வது கட்டத் தேர்தலில் காவல்துறையின் செயல்பாடு தீவிர ஆய்வுக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சிக்கான தேர்தலில் மிக மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் போல அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தவிர்க்கும் பொருட்டு இரு நகர்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பதட்டமான பகுதிகளில் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ணின்னெச்சரிக்கையாக ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளை வாக்குப்பதிவு ணிடிவடைந்ததும் அந்தந்த பகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.
வாக்க எண்ணிக்கை:
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 18ம் தேதி காலை தொடங்கும். அன்று பிற்பகல் ணிதல் ணிடிவுகள் வெளியாகத் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல மதுரை மத்திய தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணி 17ம் தேதி காலை தொடங்கும். அன்று பிற்பகல் ணிடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications