மறு வாக்குப் பதிவு: அதிமுக, சிபிஎம் புறக்கணிப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெறும் மறு வாக்குப் பதிவை அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியகட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும்வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்டத் தேர்தல் நடந்த, சென்னையில் 17 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 60வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு வேறொரு தேதியில்,ராணுவத்தின் உதவியுடன் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கை.
எனவே சென்னையில் நடைபெறும் மறு வாக்குப் பதிவில் அதிமுக கலந்து கொள்ளாது, புறக்கணிக்கும்.தமிழகத்தின் இதர பகுதிகளில் நடைபெறும் மறு வாக்குப் பதிவில் அதிமுக கலந்து கொள்ளும் என்றுகூறியுள்ளார்.
மார்க்சிஸ்டுகளும் புறக்கணிப்பு:
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னை மாநகராட்சியின் 17 பூத்துகளில் நடைபெறும் மறுவாக்குப் பதிவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென் சென்னை மாவட்ட சிபிஎம் செயலாளர் டி.கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளை முழுமையாக கைப்பற்றி தேர்தலை முடித்து விட்டனர்திமுகவினர்.
ஆனால் தேர்தல் அமைதியாகவும், எந்தவித வன்முறையும் இன்றி நடந்து முடிந்ததாக காவல்துறை ஆணையரும்,டிஜிபியும், தேர்தல் ஆணையரும் கூறியுள்ளது மிகவும் அருவெறுப்பாக உள்ளது.
இப்போது 17 வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் மறு வாக்குப் பதிவு என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவேஇதனைப் புறக்கணிக்கவும், வாக்கு எண்ணிக்கையையும் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications