தலித் பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தோடு மாயம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கீரிப்பட்டி பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பால்ச்சாமி தனது குடும்பத்தோடுகிராமத்தை விட்டு தலைமறைவாகி விட்டார். குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலைத் தொடர்ந்து அவர்தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்இதை ஏற்க மறுத்த குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் பஞ்சாயத்துத் தலைவராக தலித் வருவதை விரும்பாமல் கடந்த பலஆண்டுகளாக தேர்தலே நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.

இதனால் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி பல காலமாகவே காலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில்சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு ஊர் மக்கள் சார்பில் பால்ச்சாமி என்பவர்நிறுத்தப்பட்டார்.

அவரை எதிர்த்து வேறு யாரும் நிற்காததால், பால்ச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பால்ச்சாமிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

தற்போது பால்ச்சாமியை காணவில்லை. தலித் காலனியில் உள்ள அவரது வீடும் பூட்டப்பட்டுக் கிடக்கிறது.குடும்பத்தோடு அவர் கிராமத்தை விட்டு சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

கீரிப்பட்டி பஞ்சாயத்துக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அடுத்த நிமிடமே ராஜினாமா செய்து விடுவதுவழக்கமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து தப்பிக்கவே தனது குடும்பத்தினருடன் பால்ச்சாமிதலைமறைவாகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கீரிப்பட்டியில் தலித் சமூகத்தினருக்கு இப்படிப்பட்ட சிக்கல் இருப்பது புதிதல்ல. பூங்கொடியான் என்பவர் 5ஆண்டுகளுக்கு முன்பு கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவியேற்ற அடுத்தநிமிடமே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அத்தோடு அவர் ஊரை விட்டும் சென்று விட்டார். இன்று வரை அவர் ஊர் திரும்ப வில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பூங்கொடியானின் தாயார் வீரம்மாள் கூறுகையில், எனது மகன் பூங்கொடியான் 5ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு போனவன்தான். இதுவரை அவனால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.திரும்பி வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்த நிலை என்கிறார்.

இதைக் கருத்தில் கொண்டுதான் பால்ச்சாமி ஊரை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

கீரிப்பட்டியைப் போலவே நாட்டாமங்கலம், பாப்பாபட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித்பஞ்சாயத்துக்களும் தலைவர் இல்லாமல் உள்ளன. கொட்டக்காச்சியேந்தலிலும் ஊர் மக்களால் நிறுத்தப்பட்டவேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரும் பதவியேற்றவுடன் ராஜினாமா செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டாமங்கலத்தில் 5 பேர் போட்டியிடுகின்றனர். பாப்பாபட்டியில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+