அப்சலுக்கு தூக்கு கயிறு ரெடி!
லக்னோ:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவைதூக்கிலிடுவதற்குத் தேவையான கயிறு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனையிலிருந்து அப்சலைக் காப்பாற்றக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அப்சலின்மனைவி கருணை மனு சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் கலாம் எந்த முடிவையும்எடுக்கவில்லை.இந்த நிலையில், அப்சலைத் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்துமேற்கொண்டுள்ளது. முதலில் தூக்கில் போடுவதற்கான நபரை தேர்வு செய்தது. தற்போது தூக்குக் கயிறுதயார்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸார் நகரில் உள்ள சிறையிலிருந்து இந்த கயிறு வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்ஸார்சிறை கண்காணிப்பாளர் அன்சாரி கூறுகையில், திகார் சிறைக்கு 3.75 கிலோ எடை கொண்ட, மெழுகுப் பூச்சுடன்கூடிய கயிறு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கயிறு 60 அடி நீளம் கொண்டது. ஒரு கிலோவுக்கு ரூ. 180 என்ற கணக்கில், வாட் வரி, விற்பனை வரிஉள்ளிட்டவை சேர்த்து மொத்தம் ரூ. 1,820 கொடுத்து டெல்லியிலிருந்து வந்த குழுவினர் கயிற்றை வாங்கிச்சென்றுள்ளனர். மணிலா கயிறு என்று இதற்குப் பெயர்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த சிறையில் கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும்கயிறுகள் மிகவும் உறுதியானவை. மிகவும் புகழ் பெற்றவை. பல மாநிலங்களில் தூக்குத் தண்டனை கைதிகளைதூக்கில் போட இங்கிருந்துதான் கயிறுகளைப் பெறுகிறார்கள்.
தூக்குக் கயிறுகளைத் தயாரிப்பதற்காக இங்கு தனி இயந்திரம் உள்ளது. சிறைக் கைதிகளே இக்கயிறுகளைதயாரிக்கிறார்கள். தூக்குக் கயிறு தவிர கைதிகளின் கைகளைக் கட்ட உதவும் கயிறுகள், கூடாரம் அமைப்பதற்கானகயிறு உள்ளிட்ட பல வகையான கயிறுகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
தூக்கில் தொங்க விடப்படும் கைதிக்கு எந்தவிதமான அசவுகரியம் ஏற்படாத வகையில் எங்களது சிறைக்கயிறுகள், மிகவும் கவனம் எடுத்துச் செய்யப்படுபவை என்றார் அன்சாரி.












Click it and Unblock the Notifications