அதிமுக எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது!
சென்னை:
அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபுவை நள்ளிரவில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.இதையொட்டி போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில்போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனைநடத்தியபோது அதில் 5 பெட்ரோல் குண்டுகளும், ஏராளமான ஆயுதங்களும் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வேனில் இருந்த 16 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,வட சென்னையைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் அனுப்பித்தான் தாங்கள் பழவந்தாங்கல் பகுதியில்கலவரம் செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ.வை போலீஸார் கைதுசெய்ய முடிவு செய்தனர். முதல் கட்ட வாக்குப் பதிவின்போது போலீஸாருடன் நடந்த மோதலில் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்த சேகர்பாபுவை நேற்று நிள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.
அவரை இரவோடு இரவாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 27ம் தேதி வரை சிறைக் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் நெஞ்சு வலி என்று கூறி சேகர்பாபு ஏற்கனவே மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்ததால் அவரை மீண்டும் மருத்துவமனைக்கே போலீஸார் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications