உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்: அரசு முடிவு
சென்னை:
தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்கஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்நிதியமைச்சர் அன்பழகன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகஅரசுக்குப் பரிந்துரைக்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் மட்டக் கமிட்டி அமைக்கவும்தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டியில் அதிகாரிகள், ஊராட்சிப் பிரதிநிதிகள், பல்துறை நிபுணர்கள்உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
3 மாதத்தில் இக்கமிட்டி அரசுக்கு தனது பரிந்துரையை அளிக்கும். அதன் பின்னர் அந்த பரிந்துரைகள்அமல்படுத்தப்படும்.
இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதியுதவியை அளிக்க வேண்டும் என 3வது மாநில நிதிக்கமிஷன் அளித்துள்ள பரிந்துரையை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்தது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போதும், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இப்படி ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications