For Daily Alerts
Just In
பழி சுமத்தும் அமைச்சர்கள் மீது வழக்கு: ஜெ.
சென்னை:
என் மீது வீண் பழி சுமத்தி பேசி வரும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடருவேன் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளை நிகழ்த்தியது ஆளும் திமுக அரசுதான்என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குகின்ற அத்தனை பத்திரிக்கைளும், ஊடகங்களும்,திமுக நடத்திய வன்முறைகளை தலைப்புச் செய்தியாக புகைப்படத்தோடுவெளியிட்டிருந்தன.
ஆனால் இந்த உண்மையை மறைத்து கருணாநிதி என் மீது பழி சுமத்தி வருகிறார்.அமைச்சர்கள் அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும், இந்த வன்முறைக்கு நான்தான்காரணம் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் செய்த குற்றத்தை திசை திருப்புவதற்காகஎன் மீது வீண் பழி சுமத்தி திட்டமிட்டே அவதூறு பரப்பி வருகின்றனர்.
அவ்வாறு என் மீது வீண் பழி சுமத்துவோர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும்என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் ஜெயலலிதா.
Story first published: Tuesday, October 17, 2006, 5:30 [IST]